திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் திருநெல்வேலி டவுண் ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பேராசிரியர் மீ.முருகலிங்கம் விளக்கமளித்தார். மாகேஸ்வர பூஜையை லட்சுமி நடத்தினார். பயிற்சி வகுப்பில் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் மாணவர்கள் முத்துக்குமாரசாமி, ராம்குமார், வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அடுத்த பயிற்சி வகுப்பு இம் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.