சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பருவமழை பாதித்த நெல் வயல்களில் உர மேலாண்மை செய்வது எப்படி?

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் உர மேலாண்மையை விவசாயிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On :9 டிசம்பர் 2017, 7:38 am IST

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் உர மேலாண்மையை விவசாயிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநர் இல. பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது பெய்த மழையினால் செங்கோட்டை, வள்ளியூர், களக்காடு வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் ஒரு சில இடங்களில் நீர்த் தேங்கி நிற்கிறது. நெல் வயல்களில் நீர்த் தேங்கி நிற்பதால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதுடன் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்.
ஆகவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் தேங்கியுள்ள நீரினை உடனடியாக வடித்திட வேண்டும். மழையினால் ஏற்பட்ட ஊட்டச்சத்து இழப்பினை சரிசெய்யும் வகையில் 26 கிலோ யூரியாவுடன், 21 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து மேலுரமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு இட வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ சிங்க் சல்பேட்டை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். மழையினால் நெல் பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று பயிர்ப் பாதுகாப்பு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.