எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நெல் வாங்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள் குறைந்து வரும் நெல் விலை: விவசாயிகள் வேதனை

அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்லை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:46 am IST

அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்லை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.  கடையநல்லூர், மத்தளம்பாறை, இடைகால், வைரவன்குளம், கிளாங்காடு, தார்க்காடு உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீதம்  அறுவடை முடிந்துவிட்டது.
அறுவடை தொடக்கத்தில் குவிண்டாலுக்கு ரூ.1200 வரை விற்பனையான நெல், தற்போது படிப்படியாக குறைந்து 
ரூ. 925-க்கு விற்பனையாகி வருகிறது. அறுவடை செய்யப்பட்ட களத்திலேயே விற்பனை செய்வதைத்தான் தற்போது பெரும்பாலான விவசாயிகள் விரும்புகின்றனர். தேவையற்ற போக்குவரத்து செலவு, நெல் வீணாகும் செலவு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் விவசாயிகள் அறுவடை களத்திலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
முன்பெல்லாம்,  70 கிலோ எடை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகள் நெல்லை வாங்கி வந்தனர்.  அறுவடை களத்திலேயே நெல் வாங்கப்படுவதால் ஈரப்பதத்தால் ஏற்படும் எடை பாதிப்பை சரிகட்ட 75 கிலோவாக குவிண்டாலை உயர்த்தி வியாபாரிகள் பெற்று வந்தனர்.  ஆனால், தற்போதோ அதையும் 80 முதல் 82 கிலோவாக உயர்த்தி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சிவகுமார் கூறியது: ஆரம்பத்தில் நெல் விலை குவிண்டாலுக்கு ரூ. 1200 வரை இருந்தது.  தற்போது ரூ.925-க்குதான் விவசாயிகள் வாங்குகின்றனர்.  அதுவும் குவிண்டாலை 80 கிலோ முதல் 82 கிலோ வரை உயர்த்தி விட்டனர்.
அதையும் தாண்டி உள்ளூர் வியாபாரிகள் பலர் ஒருங்கிணைந்து நெல் விலையை நிர்ணயம் செய்து விட்டதால் அந்த விலையை தாண்டி வாங்குவதற்கு வியாபாரிகள் தயாரில்லை.  இதனால் அறுவடை செய்யப்பட்டு பல நாள்கள் பின்னரும் வியாபாரிகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த பலரும் அதை நினைத்து கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.  நெல் விற்பனை செய்யப்பட்டு 10 நாள்கள் கழித்துதான் பணம் தரப்படும் என வியாபாரிகள் கூறும் நிபந்தனையை ஏற்க வேண்டிய நிலையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைத்தாலும் கூட அதற்கான போக்குவரத்து செலவு,  சாக்கு மூட்டைகள் செலவு,  ஆள் கூலி போன்றவற்றை ஒப்பிடும் போது அதுவும் விவசாயிகளுக்கு போதிய விலை தருவதில்லை.  எனவே, அறுவடை களத்திலேயே அரசு நெல்லை கொள்முதல் செய்தால் விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.