மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழ்ப் புலிகள் கட்சியினர் ரயில் மறியல்

பாவூர்சத்திரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:39 am

பாவூர்சத்திரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய  மத்திய  அரசை  கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக் கோரியும் மேற்கு மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில்,  பாவூர்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் குற்றாலம் குமார் தலைமையில் பங்கேற்ற ஆலங்குளம் தொகுதிச் செயலர் தமிழ்குமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலர் இளஞ்சூரியன்,  கீழப்பாவூர் ஒன்றியச் செயலர் செல்வராஜ்,  செய்தி தொடர்பாளர் தமிழ்குமரன் உள்ளிட்ட 24 பேரை பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குமரேசன்,  உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.