ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை  கட்டமைப்புகளை பலப்படுத்த கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளைப் பலப்படுத்த மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:56 am IST

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளைப் பலப்படுத்த மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் வேணுகோபால், சிவசுப்பிரமணியன், ஆசாத்பாதுஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: 
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வருகிறது. 
இதுகுறித்து மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே எங்களை இடைநீக்கம் செய்துள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம். 
இந்நிலையில் இம்மாதம் 20ஆம் தேதி திருநெல்வேலிக்கு வரும் கட்சியின் மாநிலத் தலைவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் தொண்டர்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.