ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மாணவர்களுக்கு கோடை கால போட்டிகள்: ஏப்.23இல் தொடக்கம்

உலக புத்தக தினத்தையொட்டி திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால போட்டிகள் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:00 am IST

உலக புத்தக தினத்தையொட்டி திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால போட்டிகள் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் தி. முனியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  உலக புத்தக தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கு கோடை முகாம் சிறப்பு போட்டிகள் நடைபெறுகின்றன.
திங்கள்கிழமை (ஏப். 23) பிற்பகல் 2 மணிக்கு 1முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டியும்,   செவ்வாய்க்கிழமை (ஏப். 24) பிற்பகல் 2 மணிக்கு தலை குனிந்து வாசித்தால் தலை நிமிர்ந்து வாழலாம் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறுகின்றன.
புதன்கிழமை (ஏப். 25) மாலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி,  8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தாமிரவருணி நதி நீர் வழித் தடங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு அறிவை பண்படுத்துவது புத்தகங்களா? இணையங்களா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புதன்கிழமை மாலை நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பரிசுகள் வழங்குகிறார். 
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் காலை 9 முதல் இரவு 7 மணி வரை நேரிலோ, 0462 2561712 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு நூலகரை 97897ல10361 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உலக புத்ககத் தின விழாவையொட்டி, மூன்று நாள்களும் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.