காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தொழிலாளர் நல உதவி ஆணையர் தேர்வு: 237 பேர் பங்கேற்பு

திருநெல்வேலியில் நடைபெற்ற தொழிலாளர் நல உதவி ஆணையர் பணிக்கான போட்டித் தேர்வில் 237 பேர் பங்கேற்றனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:54 am

DIN

திருநெல்வேலியில் நடைபெற்ற தொழிலாளர் நல உதவி ஆணையர் பணிக்கான போட்டித் தேர்வில் 237 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொழிலாளர் நலத் துறையில் உதவி ஆணையர் பதவிக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி நகரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற இத்தேர்வில் பங்கேற்க 372 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இத்தேர்வில் 237 பேர் பங்கேற்றனர். 135 பேர் கலந்து கொள்ளவில்லை.  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேர்வு மையத்திற்கு சென்று பார்வையிட்டார். அவருடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, தேர்வு நடைபெற்ற மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.