திருநெல்வேலியில் நடைபெற்ற தொழிலாளர் நல உதவி ஆணையர் பணிக்கான போட்டித் தேர்வில் 237 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொழிலாளர் நலத் துறையில் உதவி ஆணையர் பதவிக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி நகரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற இத்தேர்வில் பங்கேற்க 372 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இத்தேர்வில் 237 பேர் பங்கேற்றனர். 135 பேர் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேர்வு மையத்திற்கு சென்று பார்வையிட்டார். அவருடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, தேர்வு நடைபெற்ற மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.