பாளையங்கோட்டையில் வங்கி இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜயா வங்கி, தேனாவங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை இணைக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அடங்கிய 9 சங்கங்கள் இணைந்து வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
அதன் முன்னோட்டமாக பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி விக்டர் துரைராஜ் முன்னிலை வகித்தார். தேசிய வங்கி ஊழியர் அமைப்பைச் சேர்ந்த கில்பர்ட், வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி சரவணராஜா, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நிர்வாகி செந்தில் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சக்திவேலாயுதம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீர் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்! | Pondicherry

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


