கல்பனா சாவ்லா விருது: ஜூன் 20க்குள் வீர, தீர மகளிர் விண்ணப்பிக்கலாம்

வீர, தீரச் செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

வீர, தீரச் செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படவுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதில், சுயவிவரம், புகைப்படம், பத்திகைச் செய்தி, சான்றிதழ்கள், வீர-தீர சாதனைகள் பற்றிய விவரங்கள் ஆகியவை 3 ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக இடம்பெற வேண்டும். விண்ணப்பத்தை ர.வீரபத்ரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், பாளையங்கோட்டை அணணா விளையாட்டரங்கம், திருநெல்வேலி என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமோ ஜூன் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ர.வீ.வீரபத்ரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com