மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சுத்தமல்லி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

சுத்தமல்லி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:03 am

DIN

சுத்தமல்லி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சுத்தமல்லி அருகேயுள்ள பழவூரைச் சேர்ந்தவர் ஆணைக்குட்டி (60). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரில் தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பழவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, குறுக்கே பெண் ஒருவர் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், வாகனத்தை நிறுத்த முயன்ற ஆணைக்குட்டி எதிர்பாராமல் கீழே தவறி விழுந்து காயமடைந்தார்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரிக்கின்றனர்.
நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற தொழிலாளி சாவு
திருநெல்வேலி, ஜூன் 4: கரிவலம்வந்தநல்லூர் அருகே விபத்தில் காயமடைந்தவர், திருநெல்வேலி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பெரியகோவிலான் குளத்தைச் சேர்ந்த சாத்தப்பன் மகன் மாடசாமி (38). தொழிலாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.