எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லையில் ரூ. 8 லட்சம் நகை திருட்டு வழக்கு: நாகர்கோவில் இளைஞர் சிக்கினார்

திருநெல்வேலியில் கடந்த ஆண்டு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன வழக்கில் நாகர்கோவில் இளைஞர் போலீஸாரிடம் சிக்கினார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:55 am

DIN

திருநெல்வேலியில் கடந்த ஆண்டு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன வழக்கில் நாகர்கோவில் இளைஞர் போலீஸாரிடம் சிக்கினார். அவரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து, நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள கிருஷ்ணன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரிஜிஸ் (26). இவரை, நாகர்கோவில் போலீஸார் ஒரு வழக்கு தொடர்பாக பிடித்து விசாரணை நடத்தினராம்.  அப்போது அவர், பாளையங்கோட்டை வடக்கு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள சிவசாமி (48) என்பவர் வீட்டில் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் ரூ. 8.65 லட்சம் மதிப்பிலான நகைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைத் திருடியது தெரியவந்ததாம். தகவலறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார்,  நீதிமன்ற உத்தரவின்பேரில் ரிஜிஸை காவலில் எடுத்து, கைது செய்து விசாரித்துவந்தனர். 
இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலுக்கு புதன்கிழமை அனுப்பிவைத்தனர். நகைகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.