சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூரில் பள்ளியின் பூட்டை உடைத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நடுக்கல்லூரில் ஒரே வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலக்கல்லூர், பட்டன்கல்லூர், சங்கன்திரடு, பழவூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் சென்ற மர்மநபர்கள் தொடக்கப் பள்ளி வகுப்பறையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர். மேலும், வகுப்பறையில் இருந்த பெயின்ட், அரிசி உள்ளிட்டவற்றையும் தரையில் கொட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சுத்தமல்லி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கெனவே இருமுறை பூட்டை மட்டும் உடைத்த கும்பல், இப்போது பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளதால் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி கண்காணிக்க பொதுமக்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

