திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவர்கள், பொதுப் பிரிவினர் உள்பட 232 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் மார்ச் மாத விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், நீச்சல் போட்டிகள், குழு விளையாட்டுப் போட்டிகள், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மாணவர், மாணவியர், பொதுப்பிரிவினர் உள்பட 232 பேர் கலந்து கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.வி. வீரபத்திரன், பதக்கங்கள், சான்றுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், நீச்சல் பயிற்றுநர் கர்ணன், குத்துச்சண்டை பயிற்றுநர் சிவகுமார்பால், ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் தாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தடகளப் பயிற்றுநர் சத்யகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

