புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பாலாமடையில் மணல் திருட்டு: ஒருவர் கைது

சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் தாமிரவருணி ஆற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 11:46 pm

சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் தாமிரவருணி ஆற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமிரவருணி, கருமேனியாறு, நம்பியாறு, சிற்றாறு கரையோர பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் போலீஸார் ரோந்து சென்றபோது அங்கு மூட்டைகளாக கட்டி மணலை ஒருவர் திருட முயன்றது தெரியவந்ததாம். விசாரணையில் அவர், பாலாமடையைச் சேர்ந்த கோமு (44) என்பது தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.