எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆரியங்காவு வனப் பகுதியில் தீ

தமிழக -கேரள மாநிலங்களின் எல்லையான  ஆரியங்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வனப்பகுதிக்குள்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:57 am IST

தமிழக -கேரள மாநிலங்களின் எல்லையான  ஆரியங்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 
 வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அடந்துள்ள பகுதிக்கு வேகமாக தீ பரவியதில், மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.   தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால்  அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின. தற்போதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயின் உக்கிரத்துக்கு காடுகளில் வாழும் அணில், சிறுத்தை, காட்டுப்பன்றி, மிளா, உடும்பு  உள்ளிட்ட விலங்கினங்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.