திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் புதிய எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் நான்குவழிச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய சிவப்பு சமிக்ஞை விளக்கு அமைக்கும் பணி நிறைவுற்று தயார் நிலையில் இருந்தது. இந்த எச்சரிக்கை விளக்கு செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கங்கைகொண்டான் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் எச்சரிக்கை விளக்கின் செயல்பாட்டை இயக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் உடனிருந்தனர். தொலைவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த சிவப்பு சமிக்ஞை விளக்கைப் பார்த்து வாகனத்தை எச்சரிக்கையுடன் ஓட்டுவர். இதனால் விபத்துகள் பெருமளவு தவிர்க்கப்படும். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முறைகேடாக நிலங்களை கையகப்படுத்த முயற்சி: சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
