11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வாஞ்சி இயக்கம் சார்பில் பராக்கிரமபாண்டியனுக்கு விழா

தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:07 am IST

தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.
வாஞ்சி இயக்கம் சார்பில் தென்காசி வர்த்தக சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வாஞ்சி இயக்க நிறுவனர்- தலைவர் பி.ராமநாதன் தலைமை வகித்தார். தென்காசி வர்த்தக சங்கச் செயலர் பி.பரமசிவன் முன்னிலை வகித்தார்.
ஜே.சி.ஐ. தென்காசி கிளை தலைவர் கே.முருகேசன், மாரிராஜு, பரமானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேவாலயா ரவணசமுத்திரம் கிளையை சேர்ந்த சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.