ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
தென்காசி ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த பரமசிவன் மகன் இசக்கிராஜ் (27). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆலங்குளம் ராஜிவ்நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் மகேஸ்வரிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு, 6 மாத ஆண் குழந்தை உள்ளது. பெற்றோர் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக இசக்கிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வந்தாராம்.
அத்தியூத்து தனியார் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் இசக்கிராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


