ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
தென்காசி ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த பரமசிவன் மகன் இசக்கிராஜ் (27). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆலங்குளம் ராஜிவ்நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் மகேஸ்வரிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு, 6 மாத ஆண் குழந்தை உள்ளது. பெற்றோர் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக இசக்கிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வந்தாராம்.
அத்தியூத்து தனியார் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் இசக்கிராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத்: பண மழையில் நனைந்த பாடகர்!

ஹோர்முஸ் நீரிணை எதிரிகளைத் தவிர அனைவருக்கும் திறப்பு! - தில்லியில் ஈரானிய அமைச்சர் பேச்சு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்
பாகிஸ்தான் அணிக்கு 40% அபராதம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
