நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞர் சாவு

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை  உயிரிழந்தார். 

Updated On :24 ஜனவரி 2019, 2:51 am IST

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை  உயிரிழந்தார். 
தென்காசி ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த பரமசிவன் மகன் இசக்கிராஜ் (27). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆலங்குளம் ராஜிவ்நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் மகேஸ்வரிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்  நடைபெற்றது. இத்தம்பதிக்கு, 6 மாத ஆண் குழந்தை உள்ளது.  பெற்றோர் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக இசக்கிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வந்தாராம்.
அத்தியூத்து தனியார் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் இசக்கிராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.