கங்கைகொண்டான் அருகே கிணற்றில் சடலமாகக் கிடந்த மாணவியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள கலைஞர் காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் சங்கீதா (14). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவரை காணவில்லையாம். உறவினர்கள் தேடியபோது அதே பகுதியில் உள்ள கிணற்றில் மூழ்கியது தெரியவந்ததாம்.
இத்தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் இணைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து, மாணவி எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


