தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பெரிய மாவட்டமாக இருப்பதால், அதைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்தியகோபால் முன்னிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
17ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி கலையரங்கில் தென்காசி வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 17ஆம் தேதி நேரில் ஆஜராகி எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி: ஆட்சியா் அலுவலகத்தில் மின்தூக்கி சீரமைப்பு!

வடபூண்டியில் செயல்படாத அரசு நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் வேதனை

அஞ்சலை அம்மாள் 136 ஆவது பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் மரியாதை

கடலூரில் பயா்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


