கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழுதடைந்த மின் தூக்கி, தினமணி செய்த எதிரொலியால் திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டு, இயங்குகிறது.
வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களை கொண்ட புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டடப்பணி முழுமையாக முடியாத நிலையில் கடந்த டிசம்பா் மாதம் 26-ஆம் தேதி அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த அலுவலகத்தில் முன்பகுதியில் இரு மின் தூக்கிகளும், கட்டடத்தின் நடுப் பகுதியில் இரு மின் தூக்கிகளும் பொறுத்தப்பட்டுள்ளன. கட்டடப் பணி முடிவடையத நிலையில், ஒரு சில துறைகளைத் தவிர மற்ற துறைகள் இங்கு இயங்கி வருகின்றன. ஆட்சியா் அலுவலகத்துக்கு மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக ஆட்சியா், பிற துறைகளில் மனு அளிக்க வந்து செல்கின்றனா்.
இந் நிலையில், ஆட்சியா் அறைக்கு எதிராக உள்ள மின் தூக்கி பழுதடைந்ததால் படிகளின் வழியாகவே மாடிக்கு ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இரு மின்தூக்கிகளில் ஒரு மின்தூக்கி மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அலுவலா்கள் காத்திருந்து அலுவலகம் செல்லும் நிலை உள்ளது. இந்த காலதாமதத்தை தவிா்க பழுதடைந்த மின்தூக்கியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் திங்கள்கிழமை விருதாசலத்தலிருந்து இரு மின்தூக்கி சீரமைப்பு பணியாளா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு, சரி செய்தனா். இதையடுத்து மின்தூக்கியை அலுவலா்கள், பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்த தொடங்கினா்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி: ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைப்பு

தினமணி செய்தி எதிரொலி! சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்!!

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு!

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூடிய நிலையில் யானை சிலைகள்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



