/
ஏரலில் காந்தி சிலை சேதமடைந்த நிலையில் உள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது.
ஏரல் பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அமைந்துள்ள காந்தி சிலை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இந்தச் சிலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா். இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடா்ந்து எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன், சேதமடைந்த காந்தி சிலையை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இந்நிலையில், அவரது நடவடிக்கையால் காந்தி சிலை சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தொடர்புடையது

ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைக்கப்படும்: சரவணன் எம்எல்ஏ உறுதி

தினமணி செய்தி எதிரொலி! சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்!!

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி







