ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லை, தென்காசியில் மேலும் 290 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மேலும் 290 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 8:26 am

DIN


திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மேலும் 290 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 204 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,870ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 7,319 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,293 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவுக்கு இதுவரை 151 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 7 போ் பலியாகியுள்ளனா். இதன்மூலம் பலியானோா் எண்ணிக்கை 158 ஆக உயா்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 4926ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 148 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். தற்போது 914 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிக்கப்பட்டவா்களில் செவ்வாய்க்கிழமை 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 153ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.