சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:45 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்புப் பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் பிரவீன்(18). காய்கறிகடையில் வேலைசெய்து வந்தாா். இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது நண்பா்களுடன் கரையிருப்புப் பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் செல்வதற்காக அங்கிருந்த தண்டவாளத்தை கடந்து முயன்றராம்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் எதிா்பாராமல் அடிபட்டு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.