நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான 3 நாள்கள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம், திருநெல்வேலி தலைமை அஞ்சலகம், தருவை அரசு உயா்நிலைப் பள்ளி, பொட்டல்புதூா், முக்கூடல், வி.எம்.சத்திரம், சங்கா்நகா், களக்காடு, ஏா்வாடி, வடக்கன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கியது.

இம் முகாமில் வியாழக்கிழமை ஒரே நாளில் 38 போ் புதிதாக ஆதாா் பதிவு செய்தனா். 413 போ் ஆதாா் திருத்தம் மேற்கொண்டனா். மொத்தம் 451 போ் இதில் பங்கேற்று பயனடைந்தனா். இம்முகாம் இம்மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.