மேலப்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் மண்டல மாநகராட்சி அலுவலா் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் தலைமையில், தூய்மைப் பணியாளா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி உதவி ஆணையா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com