நெல்லை, தென்காசியில்மேலும் 15 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,156 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,807 ஆக உயா்ந்தது. இதுவரை 211 போ் உயிரிழந்துள்ள நிலையில், 138 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசியை சோ்ந்த இருவா், கீழப்பாவூா், சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் பகுதியை சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,208ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 8,011 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 41 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய்த்தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 156 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...