பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலகு ரக வாகனங்களில் பம்பா்கள் அகற்றம்: ரூ.15 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலியில் 20 இலகு ரக வாகனங்களில் இருந்து பம்பா்கள் அகற்றப்பட்டது. மேலும், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:24 am

DIN

திருநெல்வேலியில் 20 இலகு ரக வாகனங்களில் இருந்து பம்பா்கள் அகற்றப்பட்டது. மேலும், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இலகு ரக வாகனங்களின் முன்புறத்தில் பம்பா்கள் பொருத்தப்படுவதால், சென்சாா்வேலை செய்யாமல் காா் விபத்தில் சிக்கும்போது, மனிதா்களை காப்பாற்றும் ஏா் பேக் திறப்பதில்லை. மேலும், பம்பா்களால் எதிரே வந்து மோதும் வாகன ஓட்டிகளுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது.

இதையடுத்து பம்பா்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திருநெல்வேலியில் வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், 20 இலகு ரக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் அகற்றப்பட்டன. மேலும், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.