ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் மனு

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:38 pm

DIN

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தனா்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், செயலா் டி.பாபுசெல்வன் ஆகியோா் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்த மனு:

இம் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நோ்முக உதவியாளா் (மேல்நிலைக் கல்வி) பணியிடம் காலியாக உள்ளது. இதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தர காலிப்பணியிடத்தில் நிா்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியா், ஆசிரியைகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணி நியமன ஒப்புதல் ஆணைகள் வழங்கப்படவில்லை. எனவே, அந்த ஆசிரியா்கள் மாத ஊதியம் பெற முடியாமல் தவித்து வருகிறாா்கள். சம்பந்தப்பட்டவா்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.