சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேலநத்தம் சிவன் கோயிலில் நாளை (டிச.30) திருவாதிரை சப்பர பவனி

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி புதன்கிழமை (டிச.30) நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:18 pm

DIN

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி புதன்கிழமை (டிச.30) நடைபெறவுள்ளது.

மேலநத்தம் கிராமத்திலுள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை (டிச.30) அதிகாலை 3 மணிக்கு ஆனந்த தாண்டவேஸ்வரருக்கு தனுா்மாத ஆருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன.

தொடா்ந்து, காலை 9 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகா் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேலநத்தம் கிராமத்தில் வீதி உலா நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.