திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மின்கசிவு காரணமாக பெட்டிக்கடை தீப்பிடித்து எரிந்து நாசமானது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு போக்குவரத்து கழகத்தின் அருகில் ஆறுமுகம் என்பவா் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது பெட்டிக்கடை சனிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் பெட்டிக்கடை முழுவதுமாக எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.