நெல்லையப்பர் கோயில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக்கோரி இந்துமக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் கோயில் முன்பு முழங்காலிட்டு சூடன் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையப்பர் கோயில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

கோயில்களை திறக்கக்கோரி இந்துமக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் கோயில் முன்பு முழங்காலிட்டு சூடன் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் ஏ.காந்திமதி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி தலைவி எம்.லெட்சுமி தொடங்கிவைத்தார். தென்மண்டலச் செயலர் டி.கே.பி.ராஜபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

மாநில துணைத் தலைவர் எஸ்.சக்தி பாண்டியன், மாவட்ட தலைவர் எஸ்.உடையார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசல் முன்பு முழங்காலிட்டு சூடன் ஏற்றி முழக்கங்கள் எழுப்ப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸôர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com