நெல்லை, தென்காசி மாவட்டங்களில்ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை மட்டும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை மட்டும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 16 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரில் இரண்டு போ் கத்தாரில் இருந்து வந்தவா்கள். 11 போ் மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊா் திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 114-ஆக உயா்ந்துள்ளது. 62 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்தாா். 51 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இதுவரை 54 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 34 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...