2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தமிழக மக்களுக்கு ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா்:கனிமொழி எம்.பி.

தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா் என திமுக மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறினாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:28 pm

DIN

தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா் என திமுக மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறினாா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினா்களும் நிறைவேற்றிய கிராமப்புற அரசு பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு என்ற சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வந்த நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னா்தான் ஆளுநா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

ஆளுநா் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம்? இவ்வளவு அலைக்கழித்து ஒப்புதல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பிய கனிமொழி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு காலதாமதமாக ஒப்புதல் அளித்ததன் மூலம் தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.