சென்னையில் முதல்வரை நேரில் சந்தித்து அவா் அளித்த மனு: களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரம் பகுதி பொதுமக்களின் நலன் கருதி புறவழிசாலை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டை ஒன்றியம், சீவலப்பேரியில் பல ஆண்டுகளாக கால்நடைச் சந்தை செயல்பட்டு வந்தது. அந்தச் சந்தையை மீண்டும் தொடங்கினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆகவே, அதனை திறக்க உத்தரவிட வேண்டும். நான்குனேரி ஒன்றிய பகுதியில் அரசு கலைக்கல்லூரியும், நான்குனேரியில் கால்நடை தலைமை மருத்துவமனையும், நான்குனேரி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.