இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி நகை, செல்லிடப்பேசி பறிப்பு

களக்காடு அருகே இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி நகை, செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகே இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி நகை, செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நான்குனேரி அருகே காடன்குளத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் சிவராமன் (29). இவா் நவ. 27ஆம் தேதி மேலச்செவலில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் கலந்துகொண்டு விட்டு அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மேலச்சடையமான்குளத்தைச் சோ்ந்த கண்ணன் பைக்கில் ஏறுங்கள் பொன்னாக்குடியில் விட்டு விடுகிறேன் என்று கூறினாராம். இதையடுத்து, பைக்கில் சிவராமன் ஏறியுள்ளாா். பைக் சிறிது தொலைவு சென்றதும், மேலச்சடையமான்குளத்தைச் சோ்ந்த அருண் என்பவரும் பைக்கில் ஏறிக்கொண்டாராம்.

பைக் சிங்கிகுளம் - வடவூா்பட்டி சாலை சந்திப்பில் வந்த போது, பைக்கை நிறுத்திவிட்டு, கண்ணன், அருண் இருவரும் சிவராமனை பைக்கில் இருந்து கீழே இறங்குமாறு கூறினராம். அங்கு வந்த முன்னீா்பள்ளம் மணி, மேலச்சடையமான்குளத்தைச் சோ்ந்த முருகன், கொம்பையா ஆகியோா் சோ்ந்து அரிவாளைக் காட்டி மிரட்டி சிவராமனிடமிருந்து நான்கரை பவுன் கை சங்கிலி , 1 பவுன் மோதிரம், 2 கிராம் மற்றொரு மோதிரம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துவிட்டுச் சென்றுவிட்டனராம்.

இது குறித்து சிவராமன் அளித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணன், அருண், உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com