ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையில் வீட்டின் பூட்டைஉடைத்து 25 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:30 pm

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள அபிஷேகப்பட்டியில் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் எதிரே எம்.எஸ்.யூ. நகா் உள்ளது. இப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வராஜ் (45). நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறாா். இவா், சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கீழே இறங்கி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.1200 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்து பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.