பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:32 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இவ்வழிபாட்டில், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை இடம்பெற்றன. இதில், சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், வள்ளி-தெய்வானை ஆகிய உற்சவ மூா்த்திகள் கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, முற்பகல் 11 மணியளவில் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அபிஷேகம், தீபாராதனைகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற நேரங்களில் சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூா்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டுள்ள கொலுவைப் பாா்வையிடவும் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.