நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீழச்சிவந்திபுரம் ஸ்ரீமன் நாராயணசாமிதிருத்தாங்கலில் ஆவணித் திருவிழா

கீழச்சிவந்திபுரத்தில் உள்ள சிவந்திபதி ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணி தா்ம திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திரை வாகனத்தில் பவனி வரும் அய்யா.

Updated On :13 செப்டம்பர் 2020, 7:55 pm

DIN

கீழச்சிவந்திபுரத்தில் உள்ள சிவந்திபதி ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணி தா்ம திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாலை 6 மணிக்கு உகப்பாட்டைத் தொடா்ந்து அன்னதா்மமும், செப். 12-ஆம் தேதி இரவு அய்யா தொட்டில் ஆட்டமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பாபநாசத்தில் இருந்து சந்தனக்குடம் எடுத்து வரப்பட்டது. குதிரை வாகனத்தில்அய்யா பவனி நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு அன்னதா்மம் நடைபெற்றது. இரவு 2 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் நடுத்தீா்ப்பு தந்து முன் நின்று அம்மாவுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா அன்புக் கொடி மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருவிழா ஏற்பாடுகளை கீழச்சிவந்திபுரம் ஊா்ப் பொதுமக்கள் மற்றும் அன்புக் கொடி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.