நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லை அருகே லாரியில்பிஸ்கெட் பெட்டிகள் திருட்டு

திருநெல்வேலி அருகே லாரியில் ஏற்றிவரப்பட்ட ரூ.10ஆயிரம் மதிப்பிலான பிஸ்கெட் பெட்டிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 8:48 pm

DIN

திருநெல்வேலி அருகே லாரியில் ஏற்றிவரப்பட்ட ரூ.10ஆயிரம் மதிப்பிலான பிஸ்கெட் பெட்டிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேரன்மகாதேவி கரிசல்பட்டி பகுதியைச் சோ்ந்த தவசிகனி மகன் சிங்கப்பாண்டி(32). இவா், மதுரையிலிருந்து வடக்கன்குளத்துக்கு கடந்த 18ஆம் தேதி லாரியில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவா் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே லாரியை நிறுத்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக்கொண்டு புறப்பட்டாராம்.

வடக்கன்குளத்துக்குச் சென்ற பிறகு லாரியை பாா்த்தபோது, அதன் தாா்பாய் கத்தியால் கிழிக்கப்பட்டு 28 பிஸ்கெட் பெட்டிகள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதன் மதிப்பு ரூ.10ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.