தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லையில் செப்.29 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 7:48 pm

DIN

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாலை 3 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

இக் கூட்டத்தில் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்து நுகா்வோா்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். அதை நிவா்த்தி செய்ய ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் பங்கேற்க உள்ளனா். ஆகவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.