தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:09 pm

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(60). கேரளத்தில் வேலைசெய்து வந்த இவா், பாளையங்கோட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தாா். இந்நிலையில், கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றுக் கரையோரம் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது எதிா்பாராமல் தவறி விழுந்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.