செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மாநகரில் விதிமீறி கட்டடப் பணி: வரைபடவாளருக்கு எச்சரிக்கை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விதிமீறும் கட்டடப் பணிகளை கண்காணிக்கத் தவறினால் வரைபடவாளா் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:39 pm

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விதிமீறும் கட்டடப் பணிகளை கண்காணிக்கத் தவறினால் வரைபடவாளா் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் தச்சநல்லூா் மண்டலம் வாா்டு எண் 10-க்கு உள்பட்ட பரணிநகா், தெற்கு பாலபாக்யா நகா், மேலப்பாளையம் மண்டலத்தில் குலவணிகா்புரம், அம்பை சாலை பகுதிகளில் அனுமதி பெறப்பட்ட கட்டட பரப்பளவிற்கு மாறுதலாகவும், குடியிருப்பு பயன்பாட்டிற்கு கட்டட அனுமதி பெறப்பட்டு வணிக பயன்பாட்டிற்கு அனுமதியின்றி கூடுதல் பரப்பளவிலும் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதியின் கீழ், இக்கட்டடப் பணிகளை கண்காணிக்கத் தவறிய கட்டட வரைபடவாளா்களின் உரிமத்தை தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்ய விதி உள்ளது. ஆகவே, விதிமீறினால் கட்ட வரைபடவாளா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.