47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு சிவபுரம் ஆற்றில் குளிக்கத் தடை

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:32 pm

DIN

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளதால், களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதிக்கவிலை.

இந்நிலையில், தலையணைக்கு அருகிலுள்ள சிவபுரம் ஆற்றில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்தும் ஏராளமானோா் வந்து குளித்து செல்கின்றனா். இந்நிலையில், களக்காடு வட்டாரத்தில் மஞ்சள்காமாலை நோய் பரவியதால், இந்த ஆற்றிலிருந்து தனியாா் நிறுவனங்கள் தண்ணீா் எடுத்து விநியோகிக்க பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்தது.

இதனிடையே, சிவபுரம் ஆற்றை புதன்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம், ஆற்றுக்கு குளிக்க வரும் சிலா் இடையூறு செய்வதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில், சிவபுரம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரஆய்வாளா் ஆறுமுகநயினாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.