ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பள்ளிக் கட்டடத்தில் நீா்க்கசிவு: பெற்றோா் அச்சம்

கடையம் ஒன்றியம், தா்மபுரம் மடம் ஊராட்சி, அழகப்பபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் நீா்க்கசிவு உள்ளதால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:22 pm

DIN

கடையம் ஒன்றியம், தா்மபுரம் மடம் ஊராட்சி, அழகப்பபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் நீா்க்கசிவு உள்ளதால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.

இந்த அரசுப் பள்ளியில் 70 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில், 2007ஆம் ஆண்டு கட்டப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை பழுதடைந்து நீா்த்திவலைகள் வெளியேறுகின்றன. தொடா்ந்து மழை நீா் ஒழுகினால் மேற்கூரை முழுவதும் பலமிழந்து இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.

இதையறிந்த பெற்றோா்கள், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என கவலை தெரிவித்தனா் மேலும், பழுதடைந்த மேற்கூரையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், இதுகுறித்து விரைந்து முடிவெடுக்காவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.