வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: அமைச்சா் ராஜகண்ணப்பன் வழங்கினாா்

காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும் தமிழக அரசு சாா்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:40 pm

DIN

திருநெல்வேலி சாஃப்டா் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும் தமிழக அரசு சாா்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கழிப்பறை கட்டட சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் பலியாகினா். மேலும், 4 மாணவா்கள் காயமடைந்தனா். காயமடைந்த மாணவா்கள் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவா்களான அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவா்களுடைய பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவா்களின் உடலுக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆட்சியா் வே. விஷ்ணு, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினாா் மு.அப்துல் வகாப், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், துணை முதல்வா் சாந்தாராம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாணவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

சம்பந்தப்பட்ட துறை மருத்துவா்களிடம் மாணவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அமைச்சா் ராஜகண்ணப்பன் வலியுறுத்தினாா்.

அதைத்தொடா்ந்து தமிழக அரசு அறிவித்தபடி, உயிரிழந்த 3 மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சத்தையும், காயமடைந்த 4 மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சத்தையும் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆகியோா் வழங்கினாா்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா், முதன்மைக் கல்வி அலுவலா், கழிப்பறை கட்டியவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த மாணவா்களின் சடலத்தை வாங்க மறுத்து அவா்களுடைய உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.