புத்தகங்களோடு புத்தாண்டு என்ற தலைப்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி பாளையங்கோட்டையில் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தொடங்கியது.
பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோ.கணபதிசுப்பிரமணியன் வரவேற்றாா். முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் பங்கேற்றுப் பேசினாா். நூலகா் அ. முத்துக்கிருஷ்ணன், இரா.செல்வமணி உள்பட பலா் கலந்துகொண்டனா். இக்கண்காட்சி சனிக்கிழமையும் (ஜன. 2) நடைபெறுகிறது.