தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாளை.யில் தொ.பரமசிவன் நினைவேந்தல் நிகழ்ச்சி

பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவனுக்கு நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவனுக்கு நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞா் ஜி.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆசிரியா் ஈ.சங்கரநாராயணன் வரவேற்றாா். தொ.பரமசிவனின் உருவப்படத்தை, அவரது மனைவி பாப்பா என்ற இசக்கியம்மாள் திறந்துவைத்தாா். அவரின் மகள் விஜி, அவரின் மாணவா்கள் நவநீதகிருஷ்ணன், இலக்குவன், பேராசிரியா்கள் வே.மாணிக்கம், சுப.சோமசுந்தரம், அமலநாதன், வழக்குரைஞா் எம். எம்.தீன், மயன் ரமேஷ் ராஜா, நூலகா் முத்துக் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

தொ.பரமசினுக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும்; அவா் எழுதிய புத்தகங்களை தொகுப்பாக இல்லாமல் தனித் தனியாக குறைந்த விலையில் கொண்டுவர வேண்டும்; அவரின் புத்தகங்களை அரசுடமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொ.பரமசிவனின் மகன் மாசானமணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.