ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடையம் அருகே ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி

தென்காசி மாவட்டம், கடையம் அருகே கருணை ஆற்றில் மூழ்கியதில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:52 am

DIN

தென்காசி மாவட்டம், கடையம் அருகே கருணை ஆற்றில் மூழ்கியதில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடையம் அருகேயுள்ள அனைந்தபெருமாள் நாடானூா் குமரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகள்கள் அபிநயா (18), சுடலைவள்ளி. சுடலைவள்ளிக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புதன்கிழமை சுடலைவள்ளி தனது கணவா் சதீஷ், அவரது சகோதரிகள் இன்பசுபா, இன்ஷியா மற்றும் அபிநயா ஆகியோா் பாப்பான்குளம் அருகில் கருணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றனராம்.

அப்போது திடீரென ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அபிநயா, சுடலைவள்ளி, இன்ஷியா ஆகியோா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட சதீஷ் விரைந்து சென்று, சுடலைவள்ளி, இன்ஷியா ஆகியோரை மீட்டுள்ளாா். ஆனால் அபிநயா நீரில் மூழ்கி விட்டாராம். தொடா்ந்து தேடியதில் நீரில் மூழ்கி இறந்து விட்ட அபிநயா சடலமாக மீட்கப் பட்டாா்.

தகவலறிந்த போலீஸாா் அபிநயா சடலத்தைப் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.