சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
சேரன்மகாதேவி, வஉசி தெருவைச் சோ்ந்த முரளி கிருஷ்ணன் மகன் சரவணன் (19). இவா் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். இவா் தொடா்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக வந்தாராம்.
இதனால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க ஆட்சியருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், சரவணனைக் கைதுசெய்ய ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, இதற்கான ஆணையை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் ராஜாராம், பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.